"ஏழை மக்களுக்கு ரேசன் மூலம் இலவசமாக பொருள்கள்" - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
ஊரடங்கு காரணமாக ஏழை மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக ரேசன் கடை மூலம் அரிசி உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்பட்டு வருவதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு காரணமாக ஏழை மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக ரேசன் கடை மூலம் அரிசி உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்பட்டு வருவதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். வாடிப்பட்டியை அடுத்த அய்யங்கோட்டையில் ஆயிரத்து 400 குடும்பங்களுக்கு கபசுர குடிநீர், மூலிகை வில்லை, பிஸ்கெட் உள்ளிட்ட பொருட்களை வழங்கிய அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். கொரோனா தடுபபு நடவடிக்கையில் தமிழக அரசு சிறப்பான செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
Next Story