"கொரோனாவை தடுக்கும் நல்ல ஆலோசனைகளை அரசு ஏற்கும்" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தகவல்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில், குடிநீர் வழங்கல் பணி குறித்த அரசு அலுவலர்கள், ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில், குடிநீர் வழங்கல் பணி குறித்த அரசு அலுவலர்கள், ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், கொரோனாவை தடுக்க நல்ல ஆலோசனையை நல்ல எண்ணத்துடன் யார் கூறினாலும் தமிழக அரசு ஏற்றுக் கொள்ளும் என்றார்.
Next Story