காசிமேடு : "இன்று மீன் விற்பனை செய்ய தடை" - அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை காசிமேடு மீன் பிடி துறைமுகத்தில் உள்ள இறங்குதள பகுதிகளில் சில்லறை மீன் விற்பனை செய்ய ஞாயிற்றுக்கிழமையான இன்று தடை விதிக்கப்படுவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
காசிமேடு : இன்று மீன் விற்பனை செய்ய தடை - அமைச்சர் ஜெயக்குமார்
x
சென்னை காசிமேடு மீன் பிடி துறைமுகத்தில் உள்ள இறங்குதள பகுதிகளில் சில்லறை மீன் விற்பனை செய்ய ஞாயிற்றுக்கிழமையான இன்று தடை விதிக்கப்படுவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாக கூறியுள்ளார். பொதுமக்கள் மீன் பிடி துறைமுகத்திற்கு மீன் வாங்க செல்வதை, தவிர்த்து சில்லறை விற்பனைக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் மீன் வாங்கவும், கூட்டம் கூடாமல் சமூக விலகலுடன், முக கவசம் அணிந்தபடி பொதுமக்கள் தங்களை தற்காத்து கொள்ள வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்