ஜோலார்பேட்டையில் முதல் கொரோனா தொற்று - அரசு சுகாதார நிலையத்தில் ஓட்டுநராக பணியாற்றியவர்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் முதல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
ஜோலார்பேட்டையில் முதல் கொரோனா தொற்று - அரசு சுகாதார நிலையத்தில் ஓட்டுநராக பணியாற்றியவர்
x
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் முதல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. புதுப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஓட்டுனராக பணியாற்றி வந்த நபர், சென்னையிலுள்ள சுகாதாரத் துறையினருக்கு ஓட்டுநராக பணியாற்ற சென்றபோது,  அங்கு நடைபெற்ற பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட நபர் வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் வசித்து வந்த பாசம்பேட்டை பகுதி தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டு அங்குள்ள அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்