மழையும்... வெயிலும்... வானிலை நிலவரம்

தமிழகத்தின் வடமேற்கு மாவட்டங்களில் வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழையும்... வெயிலும்... வானிலை நிலவரம்
x
தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேனி, திண்டுக்கல், விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், வானிலை​ ஆய்வு மையம் கூறி உள்ளது. வடமேற்கு தமிழக மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 40 முதல் 42 டிகிரி செல்சியஸ் பதிவாக கூடும் என்றும், அடுத்த வரும் இரண்டு தினங்களுக்கு காலை11.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் திறந்த வெளியில் வேலை செய்வதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூடத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்சமாக 39 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும் எனவும் கூறப்பட்டுள்ளது. மன்னர் வளைகுடா, குமரி கடல், தெற்கு வங்க கடல் மற்றும் மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும்,
லட்சத்தீவு, கேரள கடலோர பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் சூறாவளி காற்றானது வீசக்கூடும் என்று தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம் அடுத்த 24 மணி நேரத்திற்கு மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்