கொரோனா காலத்திலும் மாஸ்க் அணிந்து திருடும் திருடர்கள் - இருசக்கர வாகனத்தை திருடும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள்

சென்னை புரசைவாக்கத்தில் மர்மநபர்கள் இரு சக்கர வாகனத்தின் பூட்டை உடைத்து திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
x
சென்னை புரசைவாக்கத்தில் மர்மநபர்கள், இரு சக்கர வாகனத்தின் பூட்டை உடைத்து திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல தனியார் பேருந்து தயாரிப்பு நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வரும் கார்த்திக் தமது ராயல் என்ஃபீல்டு வாகனத்தை, தெருவில் வெளியே நிறுத்தி உள்ளார். இன்று காலை ஏழு மணிக்கு எழுந்து வெளியே சென்று பார்த்த போது, இருசக்கர வாகனம் காணாமல் போயிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து வேப்பேரி காவல்நிலையத்தில், கார்த்திக் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளை வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்