பொது தேர்வு பணிகளுக்காக அரசு பேருந்துகள் இயக்கம் - ஜூன் 8-ந் தேதி முதல் 25 வரை இயக்கப்படும் என்று அறிவிப்பு

பொது தேர்வு பணிகளுக்காக சென்னையில் வரும் 8 -ம் தேதியிலிருந்து 41 வழித்தடங்களில் மாநகர பேருந்துக்கள் இயக்கப்படுகின்றன.
பொது தேர்வு பணிகளுக்காக அரசு பேருந்துகள் இயக்கம் - ஜூன் 8-ந் தேதி முதல் 25 வரை இயக்கப்படும் என்று அறிவிப்பு
x
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நெருங்கி விட்ட நிலையில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வசதிக்காக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய  4 மாவட்டங்களில் அரசுப் பேருந்துகளை இயக்குவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

பொது தேர்வு பணிகளுக்காக ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பள்ளிகளுக்கு செல்வதற்கு வசதியாக  சென்னையில் வரும்  8 -ம்  தேதியிலிருந்து  41 வழித்தடங்களில் மாநகர பேருந்துக்கள் காலையும் மாலையும் இயக்கப்படும் என்று  முதன்மை கல்வி அலுவலர் அனிதா தெரிவித்துள்ளார். இதே போல் பத்தாம் வகுப்பு பொது தேர்வையொட்டி மாணவர்களுக்காக வரும் 15-ம் தேதியிலிருந்து 25ஆம் தேதி வரை  41 வழித்தடங்களில் மாநகர பேருந்துக்கள் இயக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

தேர்வு நாட்களன்று காலை  7:30 மற்றும் 8 மணி  ஆகிய இரு நேரங்களில் தேர்வு மையங்களுக்கும், தேர்வு முடிந்த பிறகு பிற்பகல் 1 .45 மற்றும் 2.15 மணிக்கு மாணவர்கள் வீடு செல்வதற்கு வசதியாக  பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அனிதா தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்