இளைஞர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் - 17 வயது சிறுவன் உள்பட 4 பேர் கைது
மதுரை விரகனூரில் மதன்ராஜ் என்ற இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் சிறுவன் உள்பட நான்கு பேர் கைது செயப்பட்டனர்.
மதுரை விரகனூரில் மதன்ராஜ் என்ற இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் சிறுவன் உள்பட நான்கு பேர் கைது செயப்பட்டனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், பெயிண்டிங் வேலை செய்து வந்த மதன் ராஜிற்கு அவருடன் வேலை செய்துவந்த தொழிலாளி ஒருவரின் மனைவியுடன் தகாத உறவு இருந்தது தெரிய வந்தது. இதனால் அவருடன் வேலை செய்தவர்களுக்கு வலை விரித்த போலீசார், அதே ஊரை சேர்ந்த தவராஜா, கண்ணன் உள்பட மொத்தம் 4 பேரை கைது செய்துள்ளனர். இதில் 17 வயது சிறுவனும் அடக்கம்.
Next Story