ஊரடங்கு காலத்தில் 1 லட்சம் விதை பந்துகளை தயாரித்த மாணவர்கள்
உலக சுற்றுசூழல் தினமான இன்று ஒரு லட்சம் விதை பந்துக்கள் தயாரித்து மலை கிராம மாணவ-மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.
உலக சுற்றுசூழல் தினமான இன்று ஒரு லட்சம் விதை பந்துக்கள் தயாரித்து மலை கிராம மாணவ-மாணவிகள் சாதனை படைத்துள்ளனர். வாணியம்பாடியை அடுத்த தும்பேரி ஊராட்சிக்குட்பட்ட மலைகிராமத்தில் வசிக்கும் மாணவ-மாணவிகள் ஊரடங்கு காலத்தில் பயனுள்ள வகையில் தங்கள் விடுமுறையை செலவிட்டுள்ளனர். அவர்களை மாவட்ட ஆட்சியர் சிவனருள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் விஜயக்குமார் ஆகியோர் நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தனர்.
Next Story