ஓய்வுபெற்ற அரசு ஊழியரிடம் பணம் பறிப்பு - செல்போனில் அழைத்து ரூ.1 லட்சம் கொள்ளை
திருச்சியில் ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர் காளிதாசனை செல்போனில் அழைத்து ஒரு லட்ச ரூபாய் பணம் திருடியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மர்ம நபர் ஒருவர் காளிதாசனை தொடர்பு கொண்டு, மூத்த குடிமகனுக்கான நிவாரண நிதி 5 ஆயிரத்தை அவரது கணக்கில் வரவு வைக்க உள்ளதாக கூறி, அவரது வங்கிக் கணக்கு விபரங்களை கேட்டறிந்துள்ளார். இதையடுத்து, செல்போனுக்கு வந்த குறுந்தகவலில் தனது வங்கி கணக்கில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் பணம் எடுக்கப்பட்டுள்ளதை அறிந்த காளிதாசன் தாம் ஏமாற்றப்பட்டது குறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.
Next Story