முதலமைச்சர் பழனிசாமிக்கு மத்திய அமைச்சர் கடிதம்

ஜல் ஜீவன் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த தேவையான ஒத்துழைப்பு வழங்குவதாக ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
முதலமைச்சர் பழனிசாமிக்கு மத்திய அமைச்சர் கடிதம்
x
மத்திய அமைச்சர் எழுதிய கடிதத்தில், 2024 ஆம் ஆண்டுக்குள் ஊரகப் பகுதி வீடுகள் தோறும் குழாய் மூலம் குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். நூறு நாள் வேலைத் திட்டம் மூலம் குடிநீர் ஆதாரங்களை பலப்படுத்த கோரிக்கை விடுத்த அவர்,  ஊரகப்பகுதிகளில் அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்திற்காக தமிழக அரசுக்கு ரூ. 373 கோடியே 10 லட்ச ரூபாய் விடுவிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். நடப்பாண்டு மார்ச் மாதம் வரை 114 கோடியே 58 லட்ச ரூபாயை மட்டுமே தமிழக அரசு பயன்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

Next Story

மேலும் செய்திகள்