சாத்தூரில் முதல் கொரோனா பாதிப்பு - அரசு செவிலியர் உட்பட 4 பேருக்கு தொற்று உறுதி

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
சாத்தூரில் முதல் கொரோனா பாதிப்பு - அரசு செவிலியர் உட்பட 4 பேருக்கு தொற்று உறுதி
x
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக  தளர்வுகளுடன் ஐந்தாம் கட்ட ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.  வீதிகள் தளர்த்த பட்டதால் வெளியூர்களில் இருந்து வருபவர்கள் எண்ணிக்கை அதிகமான நிலையில், சாத்தூரில் இன்று மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. திருவள்ளுவர் மாவட்டம் திருநின்றவூரில் இருந்து கடந்த 22 ஆம் தேதி சாத்தூர் அருகே உள்ள  வெங்கடசலபுரம் குறிஞ்சி நகருக்கு வந்த அஸ்வின்குமார், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்க்கும்  சுமித்திராதேவிக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.  மேலும், நடராஜா தியோட்டர் தெருவில் வசிக்கும் ஆசிரியை  வித்தியா முத்துலட்சுமி, சென்னை நங்கநல்லூரில் இருந்து E pass எடுத்து மே 31 ஆம் தேதி எட்டக்காபட்டி வந்த மகேஸ்வரனுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்கள் தங்கியிருந்த பகுதிகளி​ல் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, சீல் வைக்கப்பட்டு உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்