சந்தைக்கு வரத்து குறைவு எதிரொலி - காய்கறிகள் விலை இரு மடங்கு உயர்வு
திருமழிசை மொத்த விற்பனை சந்தையில் அனைத்து காய்கறிகளின் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தொடங்கியதை அடுத்து, அண்டை மாநிலங்களில் இருந்து திருமழிசை சந்தைக்கு காய்கறி வரத்து குறைந்துள்ளது. இன்றைய தினம் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் டன் காய்கறி வந்துள்ளது. இதன் காரணமாக திருமழிசை மொத்த விற்பனை சந்தையில், அனைத்து காய்கறிகளின் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த நான்கு நாட்களுக்கு முன், 5 ரூபாய் முதல் 10 ரூபாய் விற்பனை செய்யப்பட்ட அனைத்து காய்கறிகளும், தற்போது 10 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை விலை அதிகரித்துள்ளது. வரும் நாட்களில் சென்னையில் உள்ள சிறு அங்காடிகளில் காய்கறிகள் விலை மேலும் உயரும் என மொத்த வியாபாரிகள் கூறுகின்றனர். காய்கறிகளின் விலை உயர்வால், இல்லத்தரசிகள் கலக்கம் அடைந்துள்ளனர்
Next Story