திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று - தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று - தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
x
திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திமுகவின் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளரும்,  சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான ஜெ. அன்பழகன் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்களைத் தொடர்ந்து வழங்கி வந்தார். இந்தநிலையில், கடந்த 2 நாட்களாவே அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டார். இந்தநிலையில், குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு  கொரோனா டெஸ்ட் எடுத்துப் பார்த்ததில் கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, தீவிர சிகிச்சை பிரிவில் அவரை அனுமதித்து, மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்