மாணவர்களின் வெப்ப அளவை கணக்கிட ஏற்பாடு: "15,000 தெர்மல் ஸ்கேனர் கருவிகள் பள்ளிகளுக்கு வழங்கப்படும்" - பள்ளிக் கல்வித்துறை தகவல்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் உடல் வெப்பநிலையை அறிய வசதியாக 15 ஆயிரம் தெர்மல் ஸ்கேனர் கருவிகள் பள்ளிகளுக்கு வழங்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
மாணவர்களின் வெப்ப அளவை கணக்கிட ஏற்பாடு: 15,000 தெர்மல் ஸ்கேனர் கருவிகள் பள்ளிகளுக்கு வழங்கப்படும் - பள்ளிக் கல்வித்துறை தகவல்
x
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் உடல் வெப்பநிலையை அறிய வசதியாக 15 ஆயிரம்  தெர்மல் ஸ்கேனர் கருவிகள் பள்ளிகளுக்கு வழங்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. முன்னதாக திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெளியிட்ட சுற்றறிக்கை ஒன்றில்,  பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக நிதி மூலம் ஒவ்வொரு பள்ளியும் தெர்மல் ஸ்கேனர் கருவிகளை வாங்க வேண்டும் என தெரிவித்திருந்தார் . இந்த நிலையில் பள்ளி கல்வித்துறை புது விளக்கத்தை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்