வெளி மாநில தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகள் - தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் தவிக்கும் வெளி மாநிலத் தொழிலாளர்களுக்கு உரிய இருப்பிடம் உணவு, மருத்துவ வசதிகளை உடனடியாக செய்து கொடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் தவிக்கும் வெளி மாநிலத் தொழிலாளர்களுக்கு உரிய இருப்பிடம் உணவு, மருத்துவ வசதிகளை உடனடியாக செய்து கொடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கறிஞர் சூரியபிரகாசம் என்பவர் தாக்கல் செய்த மனுவை, விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு, இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனையடுத்து, மஹாராஷ்டிராவில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க கோரி வழக்கறிஞர் சூரிய பிரகாசம் தொடர்ந்த வழக்கு ஜூன் 8 ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
Next Story