தமிழகத்தில் சமய வழிபாட்டு தலங்களை எப்போது திறக்கலாம்? - சமய தலைவர்களுடன் இன்று தலைமை செயலாளர் ஆலோசனை
தமிழகத்தில் வழிபாட்டு தலங்களை எப்போது திறக்கலாம் என்பது பற்றிய கருத்துக்களை பெற இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக தலைமை செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வழிபாட்டு தலங்களை எப்போது திறக்கலாம் என்பது பற்றியும், அப்போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறை குறித்தும் கருத்துக்களை பெற இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக தலைமை செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலக வளாகத்தில் இன்று மாலை 4.45 மணி அளவில் அவரது தலைமையில் சமய தலைவர்களுடன் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story