தமிழகத்தில் புதிதாக 1,091 பேருக்கு கொரோனா - ஒரே நாளில் 13 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் மேலும் ஆயிரத்து 91 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புதிதாக 1,091 பேருக்கு கொரோனா - ஒரே நாளில் 13 பேர் உயிரிழப்பு
x
தமிழகத்தில் மேலும் ஆயிரத்து 91 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 13 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கையும் 197 ஆக அதிகரித்துள்ளது. 536 பேர் புதிதாக குணமடைந்துள்ள நிலையில், மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 13 ஆயிரத்து 706 ஆக மாறியுள்ளது. அதேசமயம் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையும், 7 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

சென்னையில் ஒரே நாளில் 809 பேருக்கு கொரோனா 

சென்னையில் ஒரே நாளில் 809 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதில் 3 பேர் வெளி நாட்டில் இருந்து வந்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. இதனால் சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்து 585 என உயர்ந்துள்ளது. 8 ஆயிரத்து 554 பேர் குணமடைந்துள்ளனர். 7 ஆயிரத்து 880 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 150 பேர் உயிரிழந்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்