68 நாட்களுக்கு பின்னர் திறந்த சலூன் கடைகள் - சமூக இடைவெளியுடன் காத்திருக்கும் வாடிக்கையாளர்கள்

கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு பிறப்பித்த ஐந்தாம் கட்ட ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில், சலூன் கடைகள் சில தளர்வுகளுடன் இன்று முதல் சென்னையில் செயல்படத் தொடங்கி உள்ளது.
68 நாட்களுக்கு பின்னர் திறந்த சலூன் கடைகள் - சமூக இடைவெளியுடன் காத்திருக்கும் வாடிக்கையாளர்கள்
x
சுமார் 68 நாட்களுக்கு பின்னர் இன்று சலூன் கடைகள் உள்பட பல தொழில்களுக்கு தளர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளுடன் சலூன் கடைக்காரர்கள் மற்றும் அழகு நிலையங்கள் செயல்படத் தொடங்கி உள்ள நிலையில், வாடிக்கையாளர்களும் சமூக இடைவெளியை கடைபபிடித்து தங்கள் தலைமுடியை திருத்தம் செய்து செல்கின்றனர். பல வாடிக்கையாளர்களின் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடும் நிலையில், சகஜநிலைக்கு சென்னை ​திரும்பி வருவதை காட்டும் அறிகுறியாக இது உள்ளது என்கின்றனர் மக்கள். இதேபோல பெண்களுக்கான அழகு நிலையங்களும் செயல்படத் தொடங்கி உள்ள நிலையில், அங்கும் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. 2 மாதங்களுக்கும் மேலாக வருவாய் இன்றி தவித்த சலூன் கடை மற்றும் அழகு நிலைய உரிமையாளர்கள் மட்டுமின்றி, தொழிலாளர்கள் முகத்திலும் மகிழ்ச்சி தென்படத் தொடங்கி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்