"ரயில் பயணம் - கொரோனா அறிகுறி இல்லாதவர்களுக்கு மட்டுமே அனுமதி"

தமிழகத்தில் இன்று முதல் 4 வழித்தடங்களில் சிறப்பு ரயில்களின் இயக்கம் தொடங்கி உள்ளது.
ரயில் பயணம் - கொரோனா அறிகுறி இல்லாதவர்களுக்கு மட்டுமே அனுமதி
x
தமிழகத்தில் இன்று முதல் 4 வழித்தடங்களில் சிறப்பு ரயில்களின் இயக்கம் தொடங்கி உள்ளது. இந்நிலையில், பயணிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. அதன்படி, ரயில்களில் பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயம் என்றும், மண்டலம் விட்டு மண்டலம் செல்ல இ-பாஸ் பெறுவது கட்டாயம் எனவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ரயில் புறப்படுவதற்கு 90 நிமிடங்கள் முன்பாக ரயில் நிலையத்திற்கு பயணிகள் வர வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. நோய்த் தொற்றைத் தவிர்க்க, பயணிகள்  உணவுப்பொருள்களை, தங்கள் வீட்டிலிருந்தே கொண்டு வரவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்