ஏ.டி.எம் மிஷினை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி - முயற்சி தோல்வியால், பேட்டரி, யூ.பி.எஸ். திருட்டு
மதுரையில் ஏடிஎம் மிஷினை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க வந்த திருடன், அதற்கு வழியில்லாமல் போனதால் பேட்டரி, யூபிஎஸ் போன்றவற்றை திருடி சென்றான்.
மதுரையில் ஏடிஎம் மிஷினை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க வந்த திருடன், அதற்கு வழியில்லாமல் போனதால் பேட்டரி, யூபிஎஸ் போன்றவற்றை திருடி சென்றான். ரயில்வே நிலைய பிரதான நுழைவு வாயில் முன்பு பிரபல வங்கி ஒன்றின் ஏடிஎம் மையத்தில் ஆள்நடமாட்டம் இல்லாத நேரத்தில், உள்ளே நுழைந்த மர்மநபர் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சித்துள்ளான். ஆனால் முயற்சி தோல்வியடைந்ததால் யூபிஎஸ், பேட்டரி மற்றும் ஹார்டிஸ்க் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றான். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த திலகர் திடல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story