"கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று பேருந்துகள் இயங்காது" - மாவட்ட ஆட்சியர் அனுமதிக்கவில்லை என தகவல்
மண்டலங்களுக்குள் அரசு பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று பேருந்துகள் இயக்கப்பட மாட்டாது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மண்டலங்களுக்குள் அரசு பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று பேருந்துகள் இயக்கப்பட மாட்டாது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். நாகர்கோவில் மண்டலத்திற்கு உட்பட்ட 12 பணிமனைகளில் கீழ் இயங்கும் 50 சதவீத பேருந்துகளை இயக்குவதற்காக ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், திடீரென கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு பேருந்துகள் இயக்கப்படும் திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துக் கழகம் தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் விசாரித்தபோது, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்க வேண்டிய நிலையில், அந்த மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால் பேருந்துகளை இயக்கும் திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Next Story