"தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1149 பேருக்கு கொரோனா"

தமிழகத்தில் கொரோனா தொற்றின் புதிய உச்சமாக இன்று ஆயிரத்து 149 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
x
தமிழகத்தில் கொரோனா தொற்றின் புதிய உச்சமாக இன்று ஆயிரத்து 149 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு எண்ணிக்கை 22 ஆயிரத்து 333 ஆக உயர்ந்துள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று 13 பேர் உயிர் இழந்துள்ளதாகவும், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 173 ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் மேலும் 804 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம், சென்னையில் மட்டும் 14 ஆயிரத்து 802 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கொரோனா சிகிச்சை பெற்று வந்தவர்களில், இன்று 757 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். இதுவரை 12 ஆயிரம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தமிழக சுகாதார துறை தெரிவித்துள்ளது. 
இன்று 12 ஆயிரத்து 49 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 4 லட்சத்து 69 ஆயிரத்து 282 பேருக்கு கொரோனா பரிசோதனை முடிந்துள்ளது. தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 400 என்றும் சுகாதார துறை தெரிவித்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்