மனைவியை பிரிந்த சோகத்தில் தற்கொலைக்கு முயன்ற தொழிலாளி - வீட்டின் எதிரே மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

2 ஆண்டுகளாக மனைவியை பிரிந்து வாழும் விரக்தியில் மின் கம்பத்தின் மீது ஏறி தற்கொலைக்கு முயன்றவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
மனைவியை பிரிந்த சோகத்தில் தற்கொலைக்கு முயன்ற தொழிலாளி - வீட்டின் எதிரே மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
x
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த நடுத்தெரு பகுதியில் வசித்து வந்தவர் கூலித் தொழிலாளியான ஜீவானந்தத்துக்கும், அவரது மனைவி முத்துலட்சுமிக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு  தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த முத்துலட்சுமி சென்னையில் உள்ள தாய் வீட்டிற்கு இரண்டு  வயது குழந்தையுடன் சென்றுவிட்டார். இந்நிலையில், தனிமையில் வசித்து வந்த ஜீவானந்தம் மன அழுத்தம் மற்றும் விரக்தி காரணமாக, அதிகாலை வீட்டின் எதிரே உள்ள டிரான்ஸ்பார்மர் மீது ஏறி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்த ஜீவானந்தம், மின்கம்பிகளுக்கு இடையில் சிக்கி அந்தரத்தில் தொங்கியுள்ளார். தகவல் அறிந்த  மின்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, ஜீவானந்தத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்