குழியில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு - பலூனை எடுக்கச்சென்று பலியான சோகம்

பலூன் வைத்து விளையாடிக்கொண்டிருந்த 8 வயது சிறுவன் குடிநீர் பழுது பார்க்க தோண்டப்பட்டிருந்த குழியில் விழுந்து பரிதாபமாக உயிரிழுந்துள்ளான்.
குழியில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு - பலூனை எடுக்கச்சென்று பலியான சோகம்
x
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி காவாக்கரை சந்தை மைதானத்தில், காவிரி கூட்டுக்குடிநீர் குழாய் பழுதாகியுள்ளது. சுமார் 7 அடி குழி தோண்டிய நகராட்சி ஊழியர்கள் குழாயை  சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திடீரென மழை பெய்த‌தால், பணி பாதியில் நிறுத்தப்பட்டு, தோண்டப்பட்டிருந்த குழியில் மழைநீர் நிரம்பியது. இந்த நிலையில், அந்தபகுதியில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன், அந்த குழியில் விழுந்த தன் பலூனை எடுக்க சென்றபோது தவறி குழிக்குள் விழுந்துள்ளான். குழியில் மித‌ந்த பலூனை கண்ட அப்பகுதி மக்கள், குழிக்குள் தேடிப்பார்த்த போது, சிறுவன் சடலமாக கிடந்துள்ளான். சுஜித், சமீபத்தில் தெலங்கானாவில் சாய்வர்தன் என்ற 3வயது சிறுவன் என பல சம்பவங்கள் நிகழ்ந்தாலும், பெற்றோர் குழந்தைகள் மீது தனிக்கவனம் செலுத்துவத்தில்லை என்ற வேதனையுடன், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்