தி.மு.க. சார்பில் 10,000 பேருக்கு நிவாரண உதவி - பயனாளிகளுக்கு மு.க.ஸ்டாலின் வழங்கினார்
கொரோனா தொற்றால் வாழ்வாதாரம் இழந்த பத்தாயிரம் பேருக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் விழா மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியம் தலைமையில் நடந்தது.
சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில், ஆலந்தூர் தர்மராஜா கோவில் தெருவில் கொரோனா தொற்றால் வாழ்வாதாரம் இழந்த பத்தாயிரம் பேருக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் விழா மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியம் தலைமையில் நடந்தது. இதில் கலந்து கொண்டு நிவாரண பொருட்களை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி, தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.
Next Story