கொரோனா தொற்று - முதியவர் உயிரிழப்பு: மருத்துவ ஊழியர்கள் மீது குற்றச்சாட்டு

சென்னையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவர் உயிரிழந்தார்.
கொரோனா தொற்று - முதியவர் உயிரிழப்பு: மருத்துவ ஊழியர்கள் மீது குற்றச்சாட்டு
x
புது வண்ணாரப்பேட்டையை சேர்ந்த முதியவர் கொரோனா அறிகுறிகள் இருந்ததால், தண்டையார் பேட்டை அரசு மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், பரிசோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டதால், ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்த நிலையில், ஸ்டான்லி மருத்துவமனையில் இடப்பற்றாக்குறை உள்ளதால் தற்போதைக்கு அழைத்து செல்ல இயலாது என ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் வீட்டிலேயே வைக்கப்பட்டிருந்த அவர், திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். ஏற்கனவே ஸ்டான்லி மருத்துவமனையில் நோயாளிகளை அலைக்கழிப்பதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், தற்போது முதியவர் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




Next Story

மேலும் செய்திகள்