சென்னை வானகரம் மீன் சந்தையில் மீன்கள் வாங்க நள்ளிரவில் மக்கள் கூட்டம்

சென்னை வானகரத்தில் மீன் சந்தை 52 நாட்களுக்கு பிறகு நேற்று இரவு முதல் செயல்பட தொடங்கியது.
சென்னை வானகரம் மீன் சந்தையில் மீன்கள் வாங்க நள்ளிரவில் மக்கள் கூட்டம்
x
சென்னை வானகரத்தில் மீன் சந்தை 52 நாட்களுக்கு பிறகு நேற்று இரவு முதல் செயல்பட தொடங்கியது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அசைவ பிரியர்கள் மீன்கள் வாங்க இரவு முதலே மீன் சந்தையில் குவிந்தனர். மைதானத்தில் லாரியில் வைத்தே தற்காலிக கடைகள் அமைத்து மீன்கள் விற்பனை நடைபெற்றது. மீன்கள் வாங்க கூடிய பொது மக்களில் பெரும்பாலானோர் முகக் கவசம் அணியவில்லை. சென்னையில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், வானகரம் மீன் சந்தையில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படவில்லை.



Next Story

மேலும் செய்திகள்