"மாநிலத்துக்குள் பயணிக்க இ-பாஸ் தேவையில்லை" - தலைமை செயலாளர்களுக்கு உள்துறை செயலாளர் கடிதம்

பயணங்களுக்கு தனியாக அனுமதி மற்றும் இ-பாஸ் வாங்கும் முறைகளை கைவிட மாநில தலைமை செயலாளர்களுக்கு மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதியுள்ளார்.
மாநிலத்துக்குள் பயணிக்க இ-பாஸ் தேவையில்லை - தலைமை செயலாளர்களுக்கு உள்துறை செயலாளர் கடிதம்
x
பயணங்களுக்கு தனியாக அனுமதி மற்றும் இ-பாஸ் வாங்கும் முறைகளை கைவிட மாநில தலைமை செயலாளர்களுக்கு  மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதியுள்ளார். ஒரே மாநிலத்திற்குள் மற்றும் மாநிலங்கள் இடையே பயணிப்பதற்கான கட்டுப்பாடுகளை நீக்குவதற்கும் வலியுறுத்தி உள்ளார். கட்டுப்பாடுகள் தேவை என முடிவெடுத்தால், அது தொடர்பாக மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். பள்ளி, கல்லூரிகளை திறப்பது தொடர்பாக, உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என்றும், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களிடம் கருத்துகளை பெற்று அனுப்ப வேண்டும் என்றும் அஜய் பல்லா கேட்டுக் கொண்டுள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்