பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு கொரோனா - தனிமைப்படுத்தப்பட்ட 40 காவலர்கள்
சேலத்தில் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, விசாரணை நடத்திய காவலர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
ஆபாச வீடியோ எடுத்து இளம்பெண்களை மிரட்டியதாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து அவரிடம் விசாரணை நடத்திய மற்றும் தொடர்பில் இருந்த 40 காவலர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். மேலும் அனைத்து மகளிர் மற்றும் மாநகர் காவல் நிலையங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முக்கிய வழக்கில் கைது செய்யப்படுவர்கள் மட்டுமே காவலில் வைக்கப்படுவதாகவும், மற்றவர்கள் ஜாமினில் அனுப்பப்படுவதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
Next Story