ரங்கநாதன் தெருவில் உள்ள கடைகள் அடைப்பு - சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு
சென்னை தியாகராய நகர் ரங்கநாதன் தெருவில் சமூக இடைவெளி மற்றும் முன்னெச்சரிககை நடவடிக்கை பின்பற்றப்படாததால் அனைத்து கடைகளையும் மூட உத்தரவிடப்பட்டுளளது.
ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டத்தை தொடர்ந்து ரங்கநாதன் தெருவில் உள்ள பெரிய கடைகள் திறக்கப்பட்டன. ஆனால் இங்கு முன்னெச்சரிகை நடவடிக்கை முறையாக பின்பற்றபடுவதில்லை என புகார்கள் எழுந்தன. இதனையடுத்து அங்குள்ள கடைகளை மூடுமாறு சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை ரங்கநாதன் தெருவில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டிருக்கும் என தெரிகிறது. இதுதொடர்பாக அதிகாரிகள் மற்றும் வியாபாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
Next Story