குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த தந்தை - 7 வயது பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

சிவகாசியில் 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த தந்தை தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த தந்தை - 7 வயது பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
x
சிவகாசி அருகே உள்ள நாரணாபுரம் புதூரில் வசித்த சிவமுனி , ராமலட்சுமி தம்பதிக்கு 3 குழந்தைகள். இந்நிலையில் ராமலட்சுமி பட்டாசு தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்றிருந்த நேரத்தில் அவரின் வீட்டில் பயங்கர சம்பவம் நடந்தது. கணவர் சிவமுனி  தன்னுடைய 3 குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. 

குழந்தைகள் மூவரும் கூச்சலிட்டதால் அக்கம்பக்கத்தினர் திரண்டுள்ளனர். உடனே வீட்டை பூட்டி கொண்ட சிவமுனி தானும் விஷமருந்தியுள்ளார். அத்துடன் சிவமுனி தனது கைகளிலும் கால்களிலும் ஆயுதத்தால் வெட்டி தற்கொலைக்கு முயன்றுள்ளார். பட்டாசு தொழிற்சாலையில் இருந்த ராமலட்சுமி, தகவல் அறிந்து வீட்டிற்கு வந்துள்ளார். 3 குழந்தைகளையும் மீட்டு  சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். இதில் சிகிச்சை பலனின்றி சிவரஞ்சனி என்ற ஏழு வயது பெண் குழந்தை உயிரிழந்தது.

உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள சிவமுனிக்கும், 2 குழந்தைகளுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்கொலை முயற்சிக்கும், கொலை முயற்சிக்கும் காரணம் குடும்ப தகராறா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரித்து வருகின்றனர். தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் சிவமுனி வாய்திறந்து பேசினால் மட்டுமே சம்பவத்திற்கான காரணம் தெரியவரும்...

Next Story

மேலும் செய்திகள்