ஒரே வீட்டில் 6 பேருக்கு கொரோனா - தெரு சீல் வைக்கப்பட்டு, கிருமிநாசினி தெளிப்பு

கடலூர் தண்டபாணி நகரில் ஒரே வீட்டில் 6 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
ஒரே வீட்டில் 6 பேருக்கு கொரோனா - தெரு சீல் வைக்கப்பட்டு, கிருமிநாசினி தெளிப்பு
x
கடலூர் தண்டபாணி நகரில் ஒரே வீட்டில் 6 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் வசித்து வரும் தனியார் மருத்துவமனை ஆய்வக பெண் பணியாளருக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் அவரது கணவர், 2 குழந்தைகள், மாமனார் மற்றும் மாமியார் என 5 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து,   அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தண்டபாணி நகர் பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டு, கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்