வட்டிக்குறைப்பின் பலன் கிடைக்கவில்லை" - ரிசர்வ் வங்கிக்கு கிரெடாய் அமைப்பு கடிதம்

ரெப்போ வட்டிக் குறைப்பின் பலன் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கவில்லை என ரிசர்வ் வங்கிக்கு இந்திய கட்டுமான நிறுவனங்களின் சங்கமான கிரெடாய் கடிதம் எழுதியுள்ளது.
வட்டிக்குறைப்பின் பலன் கிடைக்கவில்லை - ரிசர்வ் வங்கிக்கு கிரெடாய் அமைப்பு கடிதம்
x
ரெப்போ வட்டிக் குறைப்பின் பலன் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கவில்லை என ரிசர்வ் வங்கிக்கு இந்திய கட்டுமான நிறுவனங்களின் சங்கமான கிரெடாய் கடிதம் எழுதியுள்ளது. பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ரெப்போ வட்டி 4 சதவீதமாக குறைக்கப்பட்டாலும், வீட்டுக்கடன் வாங்குபவர்களுக்கு அந்த பலன் கிடைக்கவில்லை என கூறியுள்ளது. கடந்த ஆண்டிலிருந்து 2 புள்ளி 50 சதவீதம் வரை ரெப்போ வீதம் குறைந்துள்ள நிலையில்,  ஒன்று புள்ளி 3 சதவீத வட்டிக் குறைப்பை  மட்டுமே வங்கிகள் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளது. தற்போதை பொருளாதார சூழலில், வட்டிக் குறைப்பு பலன் வாடிக்கையாளர்களுக்கு  கிடைக்க வழிசெய்ய வேண்டும் என்றும் கிரெடாய் வலியுறுத்தி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்