ஒசி சிகரெட் தர மறுத்த டீக்கடைக்காரர் - டீக்கடையை தீயிட்டு கொளுத்திய இளைஞர் கைது

புதுக்கோட்டை அருகே ஒசி சிகரெட் தர மறுத்த டீக்கடையை தீயிட்டு கொளுத்திய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
ஒசி சிகரெட் தர மறுத்த டீக்கடைக்காரர் - டீக்கடையை தீயிட்டு கொளுத்திய இளைஞர் கைது
x
புதுக்கோட்டை அருகே அச்சம்பத்து கிராமத்தை சேர்ந்த பூமிநாதன், அதே பகுதியில் டீ கடை நடத்தி வருகிறார்.இவரது கடையில் நேற்று மாலை அதே பகுதியை சேர்ந்த குணசேகரன் என்பவர் கடனுக்கு சிகரெட் வாங்கியுள்ளதாக தெரிகிறது. மீண்டும் இரவு டீ கடைக்கு சென்று ஒசியாக சிகரெட் கேட்டதால் கடை உரிமையாளர் பூமிநாதன் சிகரெட் தர மறுத்தார். இதனால் பூமிநாதனுக்கு கொலை மிரட்டல் விடுத்த குணசேகரன்,  இரவு 11 மணியளவில் மதுபோதையில் வந்து டீ கடையை தீயிட்டு எரித்துள்ளார். டீ கடை குடிசை என்பதால் தீ மளமளவென எரிந்தது இரவு நேரம் என்பதால் கடை முற்றிலும் எரிந்து நாசமாகியது. தீ விபத்து குறித்து பூமிநாதன் அளித்த புகாரில் போலீசார் டீ கடையின் அருகே உள்ள சிசிடிவி கேமராவை சோதனை செய்ததில், குணசேகரன் கடைக்கு தீ வைத்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்