10ம் வகுப்பு தேர்வை தள்ளிவைக்க கோரி வழக்கு : விசாரணை ஜூன் 11ம் தேதிக்கு ஒத்திவைப்பு
பத்தாம் வகுப்பு தேர்வை நடத்தும் போது, கொரோனா பரவலை தடுக்க எடுக்கப்பட உள்ள நடைமுறைகள் குறித்து, விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
பத்தாம் வகுப்பு தேர்வை தள்ளிவைக்க கோரி, வசந்திதேவி என்பவர் தொடர்ந்த வழக்கு, நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் அனிதா சுமந்த் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மாணவர்களுக்கு தொற்று ஏற்படுவதை தடுக்க எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகள் குறித்து இதுவரை அரசு விளக்கவில்லை என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதை தொடர்ந்து அரசுத் தரப்பில் ஆஜரான சிறப்பு பிளீடர், இதுகுறித்து ஜூன் 11ம் தேதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டதுடன், நிலுவையில் உள்ள மனுக்களுடன் சேர்த்து ஜூன் 11ஆம் தேதி விசாரிக்கப்படும் என கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.
Next Story