திருமணம் செய்து விட்டு பணம், நகை மோசடி என புகார் - பெண் போலீசை ஏமாற்றி தலைமறைவானவருக்கு வலைவீச்சு

நெல்லை அருகே பெண் போலீசை திருமணம் செய்துவிட்டு நகை, பணத்தை ஏமாற்றிவிட்டு தலைமறைவானவரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருமணம் செய்து விட்டு பணம், நகை மோசடி என புகார் - பெண் போலீசை ஏமாற்றி தலைமறைவானவருக்கு வலைவீச்சு
x
நெல்லை மாவட்டம் களக்காட்டில் பெண் காவலராக வேலை பார்த்து வருபவர் தங்கராணி. இவர் ராதாபுரத்தில் மளிகை கடை நடத்தி வந்த சிவ பிரேம்குமார் என்பவரை திருமணம் செய்துள்ளார். அப்போது தங்கராணியின் வசமிருந்த 7 லட்ச ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் 10 சவரன் நகைகளை சிவ பிரேம்குமார் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனிடையே இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் தான் கொடுத்த நகை, பணத்தை தங்கராணி கேட்டுள்ளார். ஆனால் அதைக் கொடுக்க சிவ பிரேம்குமார் மறுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தங்கராணி ராதாபுரம் போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்து தலைமறைவான சிவ பிரேம்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்