சிறையில் பாலியல் வழக்கு தண்டனை கைதி தூக்கிட்டு தற்கொலை - மன உளைச்சலில் தற்கொலை என சிறைத்துறை அதிகாரிகள் தகவல்

புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாலியல் வழக்கு தண்டனை கைதி, தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
x
சென்னை அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 17 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.  இந்த வழக்கை நீதிமன்றம் விசாரித்த போது, ஒருவர் இறந்த நிலையில் மேலும் ஒருவரை நீதிமன்றம் விடுவித்தது. தொடர்ந்து காவலாளி பழனி உள்ளிட்ட 4பேர் சாகும் வரை ஆயுள் தண்டனை அனுபவிக்க தீர்ப்பு  விதித்தது. மேலும் 11 பேருக்கு 5ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் புழல் சிறையின் தண்டனை பிரிவில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த பழனி என்பவர், கழிவறையின் பின்புறம் உள்ள ஜன்னலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரை மீட்ட சிறைக்காவலர்கள் உடற்கூராய்விற்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  மன உளைச்சல் காரணமாக பழனி தற்கொலை செய்து கொண்டதாக, சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்