675 புதிய மருத்துவர்களை நியமனம் செய்ய உத்தரவு - 3 மாத ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க சுகாதாரத்துறை உத்தரவு

675 புதிய மருத்துவர்களை, 3 மாத ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்ய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
675 புதிய மருத்துவர்களை நியமனம் செய்ய உத்தரவு - 3 மாத ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க சுகாதாரத்துறை உத்தரவு
x
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே மருத்துவர்கள், செவிலியர்கள், லேப் டெக்னீசியன் ஆகியோர்களை தமிழக அரசு நியமனம் செய்துள்ளது. இந்த நிலையில், ஒப்பந்த அடிப்படையில் புதிதாக 675 மருத்துவர்களை, 40 ஆயிரம் ரூபாய் தொகுப்பு ஊதியத்தில் பணியமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மருத்துவ தேர்வாணையதில் பதிவு செய்த மருத்துவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, உடனடியாக பணியில் சேர வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 25 மருத்துவ கல்லூரிகளில், பெரிய மருத்துவ கல்லூரிகளுக்கு 30 பேரும், சிறிய மருத்துவ கல்லூரிகளுக்கு 20 பேரும் நியமிக்கப்படவுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்