"பொதுத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்": தேவையான ஏற்பாடுகளை செய்ய முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு தேர்வுத்துறை அறிவுரை

பொதுத்தேர்வுகள் ஜுன் 15ஆம் தேதி முதல், திட்டமிட்ட தேதிகளில் கண்டிப்பாக நடைபெறும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
பொதுத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்: தேவையான ஏற்பாடுகளை செய்ய முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு தேர்வுத்துறை அறிவுரை
x
பொதுத்தேர்வுகள் ஜுன் 15ஆம் தேதி முதல், திட்டமிட்ட தேதிகளில் கண்டிப்பாக நடைபெறும்  என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அனைத்து முதன்மை மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், பொதுத் தேர்வுகளுக்கான புதிய அட்டவணையை சம்பந்தப்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகளில் அறிவிப்பு நோட்டீஸ்  வெளியிட வேண்டும் என்றும், வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய காவலர் பணியில் இருப்பதையும், முதன்மை கல்வி அலுவலக பணியாளர் ஒருவர் பணியில் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என தேர்வுத்துறை இயக்குநர் அறிவுறுத்தி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்