செவிலியரை தாக்கிய கணவன் கைது - ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரபரப்பு

பெரம்பலூர் அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்த செவிலியரை கணவர் தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார்.
செவிலியரை தாக்கிய கணவன் கைது - ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரபரப்பு
x
பெரம்பலூர்  அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்த செவிலியரை கணவர் தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார். ரெங்கநாதபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணிபுரிந்த ஜெயாவை, அவரது கணவர்  கண்ணன் பார்க்க வந்துள்ளார். அப்போது கண்ணன் ஜெயாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை நாற்காலியால் தலையில் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த ஜெயா,  பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். தாக்குதல் நடத்திய கண்ணனை பொது மக்கள் சிறைபிடித்து வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்