காடுவெட்டி குரு மருமகனுக்கு அரிவாள் வெட்டு - தனியார் மருத்துவமனையில் அனுமதி

ஜெயங்கொண்டத்தில், காடுவெட்டி குரு மருமகனின் சகோதரர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காடுவெட்டி குரு மருமகனுக்கு அரிவாள் வெட்டு - தனியார் மருத்துவமனையில் அனுமதி
x
ஜெயங்கொண்டத்தில் உள்ள குரு வீட்டிற்கு, அருண்குமார் என்பவர் நேற்றிரவு வந்துள்ளார். அவர் மீண்டும் தனது வீட்டிற்கு திரும்பும் போது, காமராஜர் என்பவர் வழிமறித்து அவரது வாகனத்தை பறித்துள்ளார். இந்த தகவலை அறிந்த காடுவெட்டி குருவின் மருமகன் மனோஜ், சம்பவ இடத்திற்கு வந்து காமராஜரிடம் பிரச்சினை குறித்து கேட்டுள்ளார். அப்போது இரு தரப்பினரிடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. காமராஜர் தரப்பினர், காடுவெட்டி குரு மனோஜின் சகோதரரான மதன் தலையில் கத்தியால் வெட்டியுள்ளனர். இதில் மனோஜுக்கும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து மதன், ஜெயங்கொண்டம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் மேல் சிகிச்சைக்காக, தஞ்சாவூர் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தாக்குதல் சம்பவம் காரணமாக காடுவெட்டி பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்