தனிமைப்படுத்த அழைத்து செல்லப்பட்ட கர்ப்பிணி பெண் - மகளை தன்னுடன் அனுப்ப கோரி தந்தை வாக்குவாத‌ம்

ஊரடங்கால் மொரீசியஸ் நாட்டில் சிக்கி தவித்த 98 பேர், சிறப்பு விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்த‌னர்.
தனிமைப்படுத்த அழைத்து செல்லப்பட்ட கர்ப்பிணி பெண் - மகளை தன்னுடன் அனுப்ப கோரி தந்தை வாக்குவாத‌ம்
x
ஊரடங்கால் மொரீசியஸ் நாட்டில் சிக்கி தவித்த 98 பேர், சிறப்பு விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்த‌னர். இதில் வந்த தெலங்கானாவை சேர்ந்த 28 பேர், சிறப்பு பேருந்து மூலம் அம்மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தமிழகத்தை சேர்ந்தவர்களை பேருந்துகள் மூலம் விடுதிக்கு அழைத்து சென்று தனிமைப்படுத்தும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். அப்போது, தென்காசியை சேர்ந்த ஒருவர் கர்ப்பிணி பெண்ணான தனது மகளை, மற்றவர்களுடன் பேருந்தில்  அனுப்பாமல், தன்னுடன் காரில் அனுப்ப வேண்டும் என வாக்குவாத‌த்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோரிக்கையை ஏற்க மறுத்த அதிகாரிகள், இறுதியில் அந்த கர்ப்பிணி பெண்ணை, தனி பேருந்தில் விடுதிக்கு அனுப்பி வைத்தனர்.



Next Story

மேலும் செய்திகள்