மதுரை விமான நிலையத்தில் 10 விமானங்கள் ரத்து - போதிய பயணிகள் இல்லாததால் நடவடிக்கை

போதிய பயணிகள் இல்லாததால் மதுரை விமான நிலையத்தில், 10 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மதுரை விமான நிலையத்தில் 10 விமானங்கள் ரத்து - போதிய பயணிகள் இல்லாததால் நடவடிக்கை
x
* 61 நாட்களுக்கு பிறகு மதுரை விமான நிலையத்திலிருந்து சென்னை, டெல்லி, பெங்களூரு, திருவனந்தபுரம் ஆகிய நகரங்களுக்கு, 12 விமான சேவைகள் தொடங்கின.

* ஆனால், கொரோனா தொற்று காரணமாக விதிக்கப்பட்டுள்ள இ பாஸ் கட்டாயம் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளால், பயணிகள் பலர் பயணிக்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

* இந்நிலையில், போதிய பயணிகள் இல்லாததால், மதுரை, சென்னை இடையிலான இரண்டு விமான சேவைகளை இண்டிகோ நிறுவனம் ரத்து செய்துள்ளது.

* மேலும், டெல்லி, பெங்களூரு மற்றும் திருவனந்தபுரம் ஆகிய  நகரங்களுக்கு செல்லக்கூடிய விமானங்கள் என அறிவிக்கப்பட்ட 12-ல் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

* ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் சார்பில் மதுரை, சென்னை இடையே இரண்டு விமானங்கள் மட்டுமே தற்போது இயக்கப்படுகின்றன.



Next Story

மேலும் செய்திகள்