விடைத்தாள் திருத்தும் மையங்கள் 203 ஆக அதிகரிப்பு - ஆசிரியர்களின் நீண்ட தூர பயணம் தவிர்ப்பு

விடைத்தாள் திருத்தும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பதற்காக, திருத்தும் மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளன.
x
11 மற்றும் 12 ஆம் வகுப்புவிடைத்தாள் திருத்தும் பணிகள், சென்னை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் 203 மையங்களில் நடைபெற உள்ளது. வழக்கமாக 70 மையங்களில் மட்டுமே விடைத்தாள் திருத்தப்படும் நிலையில், இந்த ஆண்டு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பதற்காக மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள்   நீண்ட தூரம் பயணிப்பதை தவிர்க்கவும் மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருக்கும் ஆசிரியர்கள் இந்த பணிகளில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது. விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் தேவையற்ற பொது நிகழ்வுகளில் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்