மீன் பிடி தடை காலத்தின் அளவு குறைப்பு - 61 நாட்களில் இருந்து 47 நாட்களாக குறைத்து உத்தரவு
கிழக்கு கடற்கரை பகுதி மீனவர்களுக்கான வங்க கடல் மீன் பிடி தடை காலத்தின் அளவு 61 நாட்களில் இருந்து 47 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.
கிழக்கு கடற்கரை பகுதி மீனவர்களுக்கான வங்க கடல் மீன் பிடி தடை காலத்தின் அளவு 61 நாட்களில் இருந்து 47 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநில அரசுகள் மற்றும் தேசிய மீனவர் பேரவை உள்ளிட்ட மீனவர் அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு மீன் வள அமைச்சகம் இந்த தடைக்கால குறைப்பை அறிவித்துள்ளது. மத்திய மீன்வள அமைச்சக உதவி ஆணையர் சஞ்சய் பாண்டே இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
Next Story