"இரு சக்கர வாகனம் பஞ்சரான விபத்தில் இருவர் உயிரிழப்பு"
தாம்பரம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கரவாகனம் பஞ்சரானதால், நடந்த விபத்தில், 2 பேர் உயிரிழந்தனர்.
தாம்பரம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கரவாகனம் பஞ்சரானதால், நடந்த விபத்தில், 2 பேர் உயிரிழந்தனர். வண்டலூர் அருகே உள்ள மண்ணிவாக்கத்தை சேர்ந்த வாசுவும், அவரது நண்பர் ராமானுஜலுவும், அம்பத்தூர் தொழிற்பேட்டையில் வேலை பார்த்து வந்தனர். வேலை முடிந்து, முடிச்சூர் சாலை மேம்பாலம் அருகே வரும் போது, பைக் பஞ்சராகி, இழுத்து செல்லப்பட்டு, அங்கிருந்த மின்கம்பத்தில் மோதியது. இதில் படுகாயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
Next Story