வீடு திரும்பினார் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
வீடு திரும்பினார் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்
x
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். மருத்துவ பரிசோதனைக்காக சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் பன்னீர் செல்வம் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து முதலமைச்சர் பழனிசாமி, அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இந்நிலையில் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக தான் பன்னீர்செல்வம் அனுமதிக்கப்பட்டதாகவும், அவரின் உடல்நிலைக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அவர் வீடு திரும்பினார்.

Next Story

மேலும் செய்திகள்