கொரோனா பரவலை தடுக்க ஆரம்ப சுகாதார மையங்களில் தனிப்பாதை - அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு

ஆரம்ப சுகாதார மையங்களில் கொரோனா பாதிப்பு மற்றும் நோய் அறிகுறியுடன் வருபவர்களுக்கு தனிப் பாதை அமைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
கொரோனா பரவலை தடுக்க ஆரம்ப சுகாதார மையங்களில் தனிப்பாதை - அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு
x
ஆரம்ப சுகாதார மையங்களில் கொரோனா பாதிப்பு மற்றும் நோய் அறிகுறியுடன் வருபவர்களுக்கு தனிப் பாதை அமைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் முயற்சியாக, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், தலைமை செயலாளர் சண்முகம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். அதில், நோய்த்தொற்று அல்லாதவர்கள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு கொரோனா பரவாமல் தடுக்க புதிய நடைமுறையை பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நோய்த்தொற்றை கட்டுப்படுத்த மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகள் காத்திருப்பு அறை, இருக்கைகள், கழிவறைகள் உள்ளிட்டவற்றை அவ்வப்போது கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்