ஏழைகளுக்கு பிரியாணி வழங்கிய புதுமணத் தம்பதி
மதுரையில் ஏழை மக்களுக்கு உணவளிக்கும் விதமாக மாமதுரை அன்னவாசல் திட்டத்தை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் கடந்த மே ஒன்றாம் தேதி தொடங்கி வைத்தார்.
மதுரையில் ஏழை மக்களுக்கு உணவளிக்கும் விதமாக மாமதுரை அன்னவாசல் திட்டத்தை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் கடந்த மே ஒன்றாம் தேதி தொடங்கி வைத்தார். இந்நிலையில் எளிய முறையில் திருமணம் செய்துகொண்ட புதுமணத் தம்பதி வீரக்குமார் மற்றும் ராதிகா, தங்கள் திருமண செலவிற்காக வைத்திருந்த பணத்தில் ஏழை எளிய மக்கள் சுமார் 420 பேருக்கு பிரியாணி வழங்கியது அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்தது.
Next Story